Wednesday, 29 January 2020

திருமண பொருத்தம்


     திருமணம் என்பது இருவர் சார்ந்தது.
ஆகையால் 1,7 ம் பாவத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

1 ம் பாவம் ஜாதகரையும்
7 ம் பாவம் எதிர் பாலினத்தை குறிக்கும்,

 அதாவது ஆண் என்றால் மனைவியையும் , பெண் என்றால் கணவனையும் குறிக்கும்.

  ஆகையால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க 1 ம் பாவத்திற்கு (லக்னத்திற்கு)
8, 12 ம் பாவமான 8,12 ம் பாவத்தையும்,

7, ம் பாவத்திற்கு 8,12 ம் பாவமான 2,6 ம் பாவத்தையும் 7 ம் பாவம் தொடர்பு கொள்ளாமல் இருந்தால் , அதாவது 7 ம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் 2,6,8,,12 ம் பாவத்தை தொடர்பு கொள்ளாமல் இருப்பது சிறப்பு.

        2,6,8,12 என தொடர்பு கொண்டு இருக்கும் போது, களத்திரகாரகன் செவ்வாய், சுக்கிரன் (பெண்ணுக்கு செவ்வாய், ஆணுக்கு சுக்கிரன் என்று இருந்தபோது பொதுவான தாம்பத்திய இன்பத்திற்கு காரகன் சுக்கிரன்)

       6,8,12 க்கு 12 ம் பாவமான 5,7,11 ம் பாவத்தை தொடர்பு கொண்டால் ஜாதகர்  அல்லது ஜாதகி பிரச்சினை இருக்காது இருந்தாலும் அதில் இருந்து விடுபடுவார்.

      ஏனெனில் 7 ம் பாவம் சமூகம் மற்றும் தொழிலைக் குறிக்கும்  என்பதால், 2,6,8,12 தொடர்பு வெளிவட்டார பழக்கத்தில்  அல்லது வியாபாரம்  நிமித்தம்  பிரச்சினை வரும்.

      7 ம் பாவ முனை உப அதிபதி எந்த விதத்திலும்  6,8,12 ம் பாவத்திற்கும் உப நட்சத்திரமாக வரக் கூடாது,

 ஏன் என்றால் 7 ம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம்  7 ம் பாவத்திற்கு சாதகமான 135,7,11 ம் பாவத்தை தொடர்பு கொண்டாலும்,
 7 ம் பாபவமுனை அதிபதியின் நட்சத்திரம் உப நட்சத்திரத்தில் உள்ள கிரகங்களின் தசை புத்தி காலங்களில் பிரிவினை மற்றும் வழக்குகளை ஏற்படுத்தி விடும்.

      மேற்கண்ட கிரகத்தின் நட்சத்திரம்
 உப நட்சத்திரம்
 உப உப நட்சத்திரத்தில்
 4 அல்லது 5  கிரகங்கள் இருந்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது..

      ஆகையால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க களத்திரகாரகன் செவ்வாய், சுக்கிரன், 7 ம் பாவம் மற்றும் நடப்பு தசை புத்திகள் சுமார் 10 ஆண்டுகளுக்கு 7 ம் பாவத்திற்கு சாதகமான 1,3,5,7,9,11 ம் பாவத்தை தொடர்பு கொள்வது சிறப்பு.

      7 ம் பாவம் தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் 2,4,6,10 தொடர்பு கொள்ளும் நிலையில்

 சுக்கிரன் அல்லது செவ்வாய் மற்றும் குரு. தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் 1,7,3,9,5,11ம் பாவங்களை தொடர்பு கொள்வது அவசியம் ஆகும்.
   
    7 ம் பாவ முனை உப அதிபதி  தான் நின்ற நட்சத்திரம் உப நட்சத்திரம் மூலம் தொடர்பு 6,9 முதல் திருமணம் முறிந்து இரண்டாம் திருமணம்.

     7 >> 8ம் பாவ தொடர்பு  இரண்டாம் திருமணம் செய்ய முடியாது.

 ஏனெனில் இரண்டாம் திருமணம் என்ற 9 ம் பாவத்திற்கு 8 ம் பாவம்.. 12 ம் பாவமாக வருவதால்,

 முதல் திருமணம பந்தத்தை முறிக்க முடியாமல் திருமண வாழ்க்கையில் மாட்டிக் கொண்டு அல்லல் படும் நிலை.

  7  >> 9,11 ம் பாவ தொடர்பு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது தகாத உறவு.

     7 >>  9,8, ம் பாவ தொடர்பு இரண்டாம் திருமணம் செய்தும் அல்லல் படும் நிலை ஏற்படும்.
9க்கு 8ம் பாவம் 12 ம் பாவம் என்பதால்...

Jothisha Acharya
Kaniprakash M
8056245107

களத்திரகாரகன்

களத்திரகாரகன்:

திருமண வாழ்க்கையின்  கேள்விக்குரிய பாவம்
 ஏழாம் பாவம் .
 களத்திரகாரகன்
 சுக்கிரன் அல்லது செவ்வாய்.

இந்த ஏழாம் பாவம் ஒரு ஆணுக்கு  சிறப்பாக இருந்தாலும் அதாவது ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தாலும்

மற்றும்
 களத்திர காரகன் சுக்கிரன் சிறப்பான தொடர்புகளைப் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு  பருவ வயதிலேயே அதாவது 26 அல்லது 27 வயதுக்கு முன் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

 இதுவே பெண் ஜாதகமாக இருந்தால் அதே  ஏழாம் பாவம் நல்ல தொடர்புகளை கொண்டிருந்தாலும் களத்திர காரகன் செவ்வாய் நல்ல தொடர்புகளைப் பெற்றிருந்தாலும் திருமணம் விரைவில் நடைபெறும்.

இந்த திருமண வாழ்க்கையினை இரண்டு விதமாக பிரிக்கலாம்.  ஒன்று பகலில் வாழக்கூடிய வாழ்க்கை. இது ஏழாம் பாவம் சம்பந்தப்பட்டது.

இன்னொன்று இரவில்  வாழக்கூடிய வாழ்க்கை. இது களத்திரகாரகன் சம்பந்தப்பட்டது
.
 மற்றவர் முன்னிலையில் வாழக்கூடிய புற வாழ்க்கை அதாவது சமுதாயத்திற்கு அந்த தம்பதியர் எவ்வாறு தோற்றமளிக்கிறார்கள் என்பது ஏழாம் பாவம்.

இரண்டாவது தனிமையில்  வாழக்கூடிய தாம்பத்திய வாழ்க்கை. இது களத்திரகாரகர்.

மேற்சொன்னவாறு ஏழாம் பாவம்  மற்றும் களத்திர காரகன்  இரண்டும் சிறப்பான தொடர்புகளைப் பெற்றிருந்தால் அவர்களுடைய சமுதாய வாழ்க்கை மற்றும் தாம்பத்திய வாழ்க்கை இரண்டும் சிறப்பாக அமையும் .

ஒருவேளை ஏழாம் பாவம் கெட்டு சுக்கிரன் அல்லது செவ்வாய் சிறப்பான தொடர்புகளைப் பெற்றிருந்தால் புற வாழ்க்கையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உடையவராக இருப்பர்.

 ஆனால் அக வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

 இங்கு  ஏழாம் பாவ உப நட்சத்திர அதிபதி சுக்கிரன் ஆக  வந்து அது நல்ல தொடர்புகளைப் பெற்றிருந்தால் அதனை நாம் காரகோ பாவ விருத்தி என அழைக்கின்றோம்.  பாரம்பரிய ஜோதிடத்தில் 7-ஆம்  வீட்டில் சுக்கிரன் இருந்தால் அதனை காரகோ பாவ நாஸ்தி என்று கூறுவார்கள்.

  ஆனால் இங்கு அப்படியே opposite ஆக,   நல்லதொடர்புகளை பெறும் பொழுது அதனை நாம் காரகோ பாவ விருத்தி என்று அழைக்கின்றோம்.


 ஏழாவது பாவம் ஒற்றைப்படை பாவத்துடன் தொடர்பு கொண்டால் சண்டை வந்தாலும் கூட அது உணர்ச்சி ரீதியாகத் தான் இருக்கும்.

  இதே ஏழாவது  பாவம்  6 8 12 என்று தொடர்பு கொள்ளும் போது ஒரு கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். அது ஒரு முடிவுக்கு வராது . நடக்கிற தசாபுத்திகள் சரியில்லைன்னா அது இன்னும் மோசமாக போய்விடும்.

Jothisha Acharya
Kaniprakash

வாடிக்கையாளர்

7ம் பாவம்


7ஆம் பாவம் எந்த பாவத்தை தொடர்பு கொள்கின்றதோ அந்த பாவத்தின் கரகங்களை ஜாதகர் தனது வாடிக்கையாளர் மூலம் அனுபவிப்பார்.

அதாவது 7ம் பாவம் அகம் சார்ந்த ஒற்றைப் படை பாவங்களான 1,3,7,11 பாவங்களுடன் தொடர்புகொண்டால்..
வாடிக்கையாளர் மூலம் பொருளாதாரத்தை
பெற்றாலும் கூட, மனமகிழ்ச்சி சந்தோஷத்தையும் பெறுவார்.

7ம் பாவம் 2,4,6,10 தொடர்புகொண்டால் வாடிக்கையாளர் மூலம் பொருள் ரீதியாக மட்டும் வியாபாரம் செய்வார். வாடிக்கையாளரின் நலன்  சார்ந்து தொழிலை நடத்தமாட்டார்.

7ம் பாவம் 8,12 பாவங்கள் தொடர்பு வடிகையாளரிடமிருந்து நிறைய இழைப்புகளை ஜாதகர் பெறுவார்.

8,12 பாவங்கள் 7 ஆம் பாவத்திற்கு 2,6, பாவமாக இருப்பதால் வாடிக்கையாளருக்கு லாபமும், ஜாதகருக்கு நஷ்டமும் ஏற்ப்படும்.

7ஆம் பாவம் 5,9,பாவதுடன் தொடர்பு கொண்டால் தன்னிடம் வருபவர்களை சந்தோஷப்படுத்துவார்.

 இந்த தொடர்பு
 10 பாவத்திற்கு 8,12 ஆக வருவதால் வடிகையாளரிடம் தொழில்ரீதியான உறவுகளை ஜாதகர் வைத்திருக்க மாட்டார்.

Jothisha Acharya
Kaniprakash M
8056245107

காலச்சக்கரம் 1

காலச்சக்கரம்:


ஒருவர் லக்னத்தில் எந்தவீடு
 8ம் வீடாக வருகின்றதோ
 அந்த வகையில் உடல் உறுப்பு பாதிக்கும்.

ஒவ்வொருவரும் தனி தன்மை வாய்ந்தவர்கள் 
ஒவ்வொரு லக்னத்திற்கும் .... 3 ... 9 ... ம்பாவங்கள் உணர்சிகள் அதிகமாக உள்ள பகுதி.

6 -... 8 .. 12 ம் பாவம் தொட்ட உடன் மூடு அவுட்டாகும் பகுதி 

5 ...11 ம் பாவம் பெரும்பாலும் அவர்களுக்கு பிடித்த பகுதி ஆகும்
ரிஷபம் ... துலாம் ..விருச்சிகம் இந்த வீடுகளில் அசு ப கிரகம் இருந்து திசா புக்தி வரும் போது காம உணர்வு அதிகரிக்கும் 

இதில் ஆண் மேசத்தில் இருந்தும் பெண் துலாத்தில் இருந்தும் பார்க்க வேண்டும்.

துலாலக்னத்திற்கு
 5ம் வீடு கும்பம்
11 வீடு சிம்மம் 

கால சக்ரத்துக்கு
 11 வீடு கும்பம் 5ம் வீடு சிம்மம் 

இவர்களுக்கு 
முழங்கால் துடை பகுதி ... மார்பின் அவயங்கள்
பெரிதாக இருக்கும் பெண்கள் மீது விருப்பம் இருக்கும் 



Jothisha Acharya
Kaniprakash M
8056245107

Thursday, 23 January 2020

YouTube link and search... "Sara jothidam TV"

You tube link  https://youtu.be/gyM8j_MA_ng
( Or )
YouTube Search...
 Sara jothidam TV


Wednesday, 22 January 2020

9ம் பாவ காரகங்கள் #astrology



ஒன்பதாம் பாவம்
 என்பது உடல் கூறில் இடுப்பு புட்டம் ஆசன வாய் போன்றவற்றை குறிக்கும்.

 மேலும் மூளையில் இருந்து நீண்ட தூரம் செல்லும் நரம்புகள் அதாவது உள்ளங்கால் நரம்புகள் போன்றவற்றையும் குறிக்கும்.

மேலும் ஒன்பதாம் பாவம் என்பது லக்கன பாவத்தின் முன்திரிகோண பாவம் என்பதால் லக்கணத்தின் காரகங்களை உடலமைப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் பாவமாக இது உள்ளது.

அதாவது ஒன்பதாம் பாவம் என்பது நமது உயிர் கொடுத்த தந்தையையும் நமது மூதாதையர்களையும் குறிக்கும் பாவமாகும்.


எனவே  ஒன்பதாம் பாவம் என்பது மரபணுக்களையும் குறிக்கும். மரபணு என்பது ஒரு உயிரின் பண்புகளை குறித்த பாரம்பரிய தகவல்களை கொண்டிருக்கும் உயிரணுவின் ஒரு பகுதியாகும்.

இந்த மரபணுக்களின் மூலம் பரம்பரை பரம்பரையாக உயிரினங்கள் தங்கள் உருவம் குணம் முதலியவற்றை தங்கள் சந்ததியினருக்கு தரும் வண்ணம் இயற்கை என்ற இறைவன் உயிரினங்களுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

அந்த வகையில் ஒன்பதாம் பாவம் என்பது பாரம்பரிய நோய்களை அதாவது மரபுவழி வந்த நோய்களை குறைக்கின்றது.

குறிப்பாக ஒன்பதாம் பாவம் 6 8 12-பாவங்களுடன் தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு பாரம்பரியம் மூலமான நோய்கள் மற்றும் உடல் உறுப்புகளின் அமைப்பு மாறுதல் உடல் உறுப்புகளின் இயக்க மறுத்தல் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Jothisha Acharya
Kaniprakash M
8056245107
கேது - 1, 3, 5, 9, 11 தொடர்பு
ஜாதகர் எப்பொழுதும் தனிமையாக இருக்க விரும்புவார்.
பிபார்த்ததும் நல்லவரா கெட்டவரா என்று தீர்மானம் செய்துவிடுவார்
ஜாதகர் நல்ல நிலையில் இருந்தாலும் அவ்வப்பொழுது இயல்பான செயல்களும் இயல்பான ஆசைகளும் அடிக்கடி மாறி கொண்டே இருக்கும். ஆத்மீகத்தில் நாட்டமும், ஈடுபாடும் இருக்கும்
ஜாதகரின் மனதை புரிந்துகொள்வது சற்று கடினம்
2. தேவையில்லாமல் அதிகமாக பேசமாட்டார். பேசினால் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசிவிடுவார்.
முகமானது சற்று இறுக்கமாகயிருக்கும்
பணத்தை சிக்கனமாக செலவு செய்வார்
3- சிறிய பயணங்களை மேற்கொள்வார்
ரகசியமாக பல தகவல்களை வைத்திருப்பார்
பொறுமையிலும் கோபத்திலும் இவருக்கு முன்நிற்க முடியாது
பொறுமையும் அதிகம்
கோபமும் அதிகம்
நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற பிடிவாதம் இருக்கும்
5. ஜாதகர் தரகு வேலை, ஜோதிடம் போன்ற அதிக உழைப்பு இல்லாத வேலையில் சிறந்து விளங்குவார் ஜாதகர் தனக்கு பிடித்தமான கலை தொழிலில் உள்ள பலவிதமான ரகசியங்களை கண்டு செயல்படுவார்
ஜாதகர் பேய், பிசாசு படங்களை விரும்பி பார்ப்பார்
கேது என்பது துண்டிப்பது வெட்டுவது போன்ற தன்மைகளை கொண்டு உள்ளதால் ஜாதகருக்கு காதலில் சிறுசிறு பிரசசனைகள் வந்து காதல் தோல்வி, முறிவு போன்றவை ஏற்படும்
9-அனைத்து ரகசியம் சார்ந்த படிப்பினை உயர்கல்வியில் படிப்பார்.
தன் முயற்சியால் சொந்தமாக பல துணுக்கங்களை கண்டுபிடிப்பார்
ரகசியமாக சட்டத்திற்கு எதிராக இரண்டாவது திருமணம், பூர்வீக சொத்துக்கள் சட்டத்திற்கு புறம்பாக ஜாதகர் வைத்திருப்பார
11-ஜாதகர் நண்பர்களிடம் சண்டை சச்சரவு எதாவது இருந்தாலும் அதை வெளிப்படையாக கூறமாட்டார்கள்.

Tuesday, 21 January 2020

என்ன படிக்கலாம்... Kp Stellar astrology

படிப்பறிவு: 💯% Jon



 4,10 சனி -> 4, 10

 கெமிக்கல் இஞ்சினீயரிங் படிப்பறிவு. 

-----+++-------
 4,10, குரு -> 4, 10 .
 மெக்கானிக்கல் என்ஜினியர்

 படித்து முடித்தவுடன் வேலை.

Jothisha Acharya
Kaniprakash M
8056245107

லக்னாதிபதி 8ல் அமர்ந்தால்... Astrology tamil


இலக்கினாதிபதி
 8 ல்  அமர்ந்து விட்டால்
 அவர்கள் முரண்பாடு நிறைந்தவர்கள்

எளிதாக
யாரையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .

தன்னைவிட அறிவில் திறைமையில்  உயர்ந்தவர்களை உதாசீனப்படுத்த தயங்க மாட்டார்கள்.

Jothisha Acharya
Kaniprakash M
8056245107

தெய்வீக பாவம் 9: #kpastrology


தெய்வீக பாவம் 9:

1>9
தூய்மையான எண்ண ஓட்டங்கள்
உதவி செய்யும் மனப்பான்மை கடவுள் சிந்தனை
கடவுளை போற்றுதல் தொலைநோக்கு சிந்தனை இயற்கையை ஆதரித்தல் அனைத்து உயிரினங்களையும் மதித்தல்  இயற்கை அறிவு
இயற்கை உதாரணப் படுத்தி வாழக் கூடியவர்.

2>9
தானம் தர்மம் கொடுத்தல் செய்தல்
வெளிநாடு செல்வதற்கு பண உதவி செய்தல்
ஆன்மீகம் பொருந்தின கதை பேச்சு.

3>9
துல்லியமான தகவல் தொடர்பு வெளிநாட்டு ஆன்மீகம் மற்றும் கோயிலுக்கு தளங்களுக்கு போக நினைப்பது .

4>9
வீட்டை கோயிலாக நினைப்பது வீட்டில்
ஆன்மீகம்  மற்றும் கடவுள் பாடல்கள் புத்தகங்கள் இருக்கும்
நல்ல ஆத்மாக்கள் மட்டுமே அங்கு இடம் உண்டு

5>9
கலை காதல் இல்லறவாழ்க்கை தாம்பத்தியம் உயிரணுக்கள் ஒரு உயிரை உருவாக்கும் சக்தி சிற்றின்ப வாழ்க்கை தூய்மையான நட்பு

6>9
கோவிலுக்குப் போவதை வேலையாக வைத்திருத்தல் ஆன்மீக மற்றும் கோயில் தளங்களில் இலவசமாக வேலை புரிதல் இயற்கை உணவு நோய் எதிர்ப்பு சக்தி எதிரிகள் இல்லை வழக்கு இல்லை மற்றவர்களை ஆளும் திறன் மிக குறைவாக இருக்கும் மற்றும் குடிப்பழக்கம் இருக்காது.

7>9
மனைவி மற்றும் தன் மக்களை நேசிப்பவர்  சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் நினைப்பவர்
இரு திருமண அமைப்பு உள்ளது.

8>9
திடீர்;  கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும் நல்ல வெளிநாட்டு செய்திகள்
கௌரவத்துக்கு எந்த பங்கமும் வராது திடீர் வலி வேதனை தடுக்கப்படும்.

9>9
கடவுள் அனுக்கிரகம் ஜாதகருக்கு 100 வீதம் உண்டு ஒரு பாவம் எப்படி செயல் படுமோ அப்படி
செயல் படும்.

10>9 அந்தஸ்து ஆளுமை தனக்கு தேவை இல்லை என்று நினைப்பவர்கள்
தொழிள் பொறுப்பில்லாதவர்கள்
தனது முன்னேற்றத்திற்கு தொழில் தேவையில்லை என்று நினைப்பவர்கள்
ஆக சார்புடைய அந்தஸ்து கௌரவம் கிடைக்கும்.

11>9
ஒழுக்கமான நண்பர்கள் மற்றும் கூட்டம் சங்கம் கோயில் ஆன்மீக தலங்களுக்கு நண்பர்களுடன் போய்வறும் அமைப்பு
வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்

12>9 நல்ல நித்திரை உடல் சுத்தமாக இருக்கும்
வெழி நாட்டில் நிரந்தரமாக குடி இருத்தல்
இரகசிய வாழ்க்கை இல்லை இரண்டாவது தொழிலுக்கு சாத்தியமில்லை.

Jothisha Acharya
Kaniprakash M
8056245107

ஜோதிடத்தில் உறவு முறைகள்

*பாவங்களும் உறவு முறைகளும் :-

*லக்னம் அல்லது  (1) :-
**********
1.ஜாதகர் அல்லது ஜாதகி,
2.தந்தை வழி முப்பாட்டன்.

*இரண்டாமிடம் (2) :
***************
1.மூத்த தாய்மாமன்,
2. பெரியம்மா

*மூன்றாமிடம் (3) :
**********
1.இளைய சகோதரம்,
2. மாமனார்,
3. தந்தை வழி முப்பாட்டி.

*நான்காமிடம் (4) :
**************
1. தாயார்.

*ஐந்தாமிடம் (5) :
************
1. முதல் குழந்தை,
2. தந்தை வழிப் பாட்டன்,
3. பெரிய மைத்துனர்,
4. பெரிய மைத்துனி ,
5. மூத்த சகோதரத்தின் கணவர் (மாமா) அல்லது மனைவி (அண்ணி)

*ஆறாமிடம் (6) :
**********
1. இளையத் தாய் மாமன்,
2. சித்தி.

*ஏழாமிடம் (7) :
*********
1. இரண்டாவது குழந்தை,
2. மனைவி,
3. தாய்வழிப்பாட்டி,
4. தந்தை வழிப் பெரியப்பா,
5. தந்தை வழிப் பெரிய அத்தை.

*எட்டாமிடம் (8) :
***********
1. மூத்த தாய்மாமனின் மனைவி(அத்தை),
2. பெரியம்மாவின் கணவர் (பெரியப்பா),
3. தாய் வழி முப்பாட்டன்.

*ஒன்பதாமிடம் (9) :
***************
1. தந்தை,
2. இளைய சகோதரத்தின் கணவன் அல்லது மனைவி,
3. இரண்டாவது குழந்தை.

*பத்தாமிடம் (10) :
***********
1. மாமியார்,
2. தாய் வழி முப்பாட்டி.

ஜோதிட ஆச்சார்யா
Kaniprakash M

*பதினோறாமிடம் (11) :
***************
1. மூத்த சகோதரம்,
2. தந்தை வழி சித்தப்பா,
3. தந்தை வழி சிறிய அத்தை,
4. இளைய மனைவி அல்லது ஆசை நாயகி.

*பன்னிரண்டாமிடம்(12):
***************
1. தந்தை வழிப் பாட்டி,
2. தாய் வழி சித்தியின் கணவர் (சித்தப்பா),
3. தாய்வழிப் பாட்டன்,
4. இளையத் தாய்மாமனின் மனைவி (அத்தை) . 


Jothisha Acharya
Kaniprakash M 
8056245107

திருமண பொருத்தம்

     திருமணம் என்பது இருவர் சார்ந்தது. ஆகையால் 1,7 ம் பாவத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். 1 ம் பாவம் ஜாதகரையும் 7 ம் பாவம் எதிர் பாலினத...