களத்திரகாரகன்:
திருமண வாழ்க்கையின் கேள்விக்குரிய பாவம்
ஏழாம் பாவம் .
களத்திரகாரகன்
சுக்கிரன் அல்லது செவ்வாய்.
இந்த ஏழாம் பாவம் ஒரு ஆணுக்கு சிறப்பாக இருந்தாலும் அதாவது ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தாலும்
மற்றும்
களத்திர காரகன் சுக்கிரன் சிறப்பான தொடர்புகளைப் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு பருவ வயதிலேயே அதாவது 26 அல்லது 27 வயதுக்கு முன் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
இதுவே பெண் ஜாதகமாக இருந்தால் அதே ஏழாம் பாவம் நல்ல தொடர்புகளை கொண்டிருந்தாலும் களத்திர காரகன் செவ்வாய் நல்ல தொடர்புகளைப் பெற்றிருந்தாலும் திருமணம் விரைவில் நடைபெறும்.
இந்த திருமண வாழ்க்கையினை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று பகலில் வாழக்கூடிய வாழ்க்கை. இது ஏழாம் பாவம் சம்பந்தப்பட்டது.
இன்னொன்று இரவில் வாழக்கூடிய வாழ்க்கை. இது களத்திரகாரகன் சம்பந்தப்பட்டது
.
மற்றவர் முன்னிலையில் வாழக்கூடிய புற வாழ்க்கை அதாவது சமுதாயத்திற்கு அந்த தம்பதியர் எவ்வாறு தோற்றமளிக்கிறார்கள் என்பது ஏழாம் பாவம்.
இரண்டாவது தனிமையில் வாழக்கூடிய தாம்பத்திய வாழ்க்கை. இது களத்திரகாரகர்.
மேற்சொன்னவாறு ஏழாம் பாவம் மற்றும் களத்திர காரகன் இரண்டும் சிறப்பான தொடர்புகளைப் பெற்றிருந்தால் அவர்களுடைய சமுதாய வாழ்க்கை மற்றும் தாம்பத்திய வாழ்க்கை இரண்டும் சிறப்பாக அமையும் .
ஒருவேளை ஏழாம் பாவம் கெட்டு சுக்கிரன் அல்லது செவ்வாய் சிறப்பான தொடர்புகளைப் பெற்றிருந்தால் புற வாழ்க்கையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உடையவராக இருப்பர்.
ஆனால் அக வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இங்கு ஏழாம் பாவ உப நட்சத்திர அதிபதி சுக்கிரன் ஆக வந்து அது நல்ல தொடர்புகளைப் பெற்றிருந்தால் அதனை நாம் காரகோ பாவ விருத்தி என அழைக்கின்றோம். பாரம்பரிய ஜோதிடத்தில் 7-ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அதனை காரகோ பாவ நாஸ்தி என்று கூறுவார்கள்.
ஆனால் இங்கு அப்படியே opposite ஆக, நல்லதொடர்புகளை பெறும் பொழுது அதனை நாம் காரகோ பாவ விருத்தி என்று அழைக்கின்றோம்.
ஏழாவது பாவம் ஒற்றைப்படை பாவத்துடன் தொடர்பு கொண்டால் சண்டை வந்தாலும் கூட அது உணர்ச்சி ரீதியாகத் தான் இருக்கும்.
இதே ஏழாவது பாவம் 6 8 12 என்று தொடர்பு கொள்ளும் போது ஒரு கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். அது ஒரு முடிவுக்கு வராது . நடக்கிற தசாபுத்திகள் சரியில்லைன்னா அது இன்னும் மோசமாக போய்விடும்.
Jothisha Acharya
Kaniprakash
திருமண வாழ்க்கையின் கேள்விக்குரிய பாவம்
ஏழாம் பாவம் .
களத்திரகாரகன்
சுக்கிரன் அல்லது செவ்வாய்.
இந்த ஏழாம் பாவம் ஒரு ஆணுக்கு சிறப்பாக இருந்தாலும் அதாவது ஒற்றைப்படை பாவங்களை தொடர்பு கொண்டு இருந்தாலும்
மற்றும்
களத்திர காரகன் சுக்கிரன் சிறப்பான தொடர்புகளைப் பெற்றிருந்தாலும் அந்த ஜாதகருக்கு பருவ வயதிலேயே அதாவது 26 அல்லது 27 வயதுக்கு முன் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.
இதுவே பெண் ஜாதகமாக இருந்தால் அதே ஏழாம் பாவம் நல்ல தொடர்புகளை கொண்டிருந்தாலும் களத்திர காரகன் செவ்வாய் நல்ல தொடர்புகளைப் பெற்றிருந்தாலும் திருமணம் விரைவில் நடைபெறும்.
இந்த திருமண வாழ்க்கையினை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று பகலில் வாழக்கூடிய வாழ்க்கை. இது ஏழாம் பாவம் சம்பந்தப்பட்டது.
இன்னொன்று இரவில் வாழக்கூடிய வாழ்க்கை. இது களத்திரகாரகன் சம்பந்தப்பட்டது
.
மற்றவர் முன்னிலையில் வாழக்கூடிய புற வாழ்க்கை அதாவது சமுதாயத்திற்கு அந்த தம்பதியர் எவ்வாறு தோற்றமளிக்கிறார்கள் என்பது ஏழாம் பாவம்.
இரண்டாவது தனிமையில் வாழக்கூடிய தாம்பத்திய வாழ்க்கை. இது களத்திரகாரகர்.
மேற்சொன்னவாறு ஏழாம் பாவம் மற்றும் களத்திர காரகன் இரண்டும் சிறப்பான தொடர்புகளைப் பெற்றிருந்தால் அவர்களுடைய சமுதாய வாழ்க்கை மற்றும் தாம்பத்திய வாழ்க்கை இரண்டும் சிறப்பாக அமையும் .
ஒருவேளை ஏழாம் பாவம் கெட்டு சுக்கிரன் அல்லது செவ்வாய் சிறப்பான தொடர்புகளைப் பெற்றிருந்தால் புற வாழ்க்கையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உடையவராக இருப்பர்.
ஆனால் அக வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இங்கு ஏழாம் பாவ உப நட்சத்திர அதிபதி சுக்கிரன் ஆக வந்து அது நல்ல தொடர்புகளைப் பெற்றிருந்தால் அதனை நாம் காரகோ பாவ விருத்தி என அழைக்கின்றோம். பாரம்பரிய ஜோதிடத்தில் 7-ஆம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அதனை காரகோ பாவ நாஸ்தி என்று கூறுவார்கள்.
ஆனால் இங்கு அப்படியே opposite ஆக, நல்லதொடர்புகளை பெறும் பொழுது அதனை நாம் காரகோ பாவ விருத்தி என்று அழைக்கின்றோம்.
ஏழாவது பாவம் ஒற்றைப்படை பாவத்துடன் தொடர்பு கொண்டால் சண்டை வந்தாலும் கூட அது உணர்ச்சி ரீதியாகத் தான் இருக்கும்.
இதே ஏழாவது பாவம் 6 8 12 என்று தொடர்பு கொள்ளும் போது ஒரு கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருக்கும். அது ஒரு முடிவுக்கு வராது . நடக்கிற தசாபுத்திகள் சரியில்லைன்னா அது இன்னும் மோசமாக போய்விடும்.
Jothisha Acharya
Kaniprakash
No comments:
Post a Comment