ஒன்பதாம் பாவம்
என்பது உடல் கூறில் இடுப்பு புட்டம் ஆசன வாய் போன்றவற்றை குறிக்கும்.
மேலும் மூளையில் இருந்து நீண்ட தூரம் செல்லும் நரம்புகள் அதாவது உள்ளங்கால் நரம்புகள் போன்றவற்றையும் குறிக்கும்.
மேலும் ஒன்பதாம் பாவம் என்பது லக்கன பாவத்தின் முன்திரிகோண பாவம் என்பதால் லக்கணத்தின் காரகங்களை உடலமைப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் பாவமாக இது உள்ளது.
அதாவது ஒன்பதாம் பாவம் என்பது நமது உயிர் கொடுத்த தந்தையையும் நமது மூதாதையர்களையும் குறிக்கும் பாவமாகும்.
எனவே ஒன்பதாம் பாவம் என்பது மரபணுக்களையும் குறிக்கும். மரபணு என்பது ஒரு உயிரின் பண்புகளை குறித்த பாரம்பரிய தகவல்களை கொண்டிருக்கும் உயிரணுவின் ஒரு பகுதியாகும்.
இந்த மரபணுக்களின் மூலம் பரம்பரை பரம்பரையாக உயிரினங்கள் தங்கள் உருவம் குணம் முதலியவற்றை தங்கள் சந்ததியினருக்கு தரும் வண்ணம் இயற்கை என்ற இறைவன் உயிரினங்களுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
அந்த வகையில் ஒன்பதாம் பாவம் என்பது பாரம்பரிய நோய்களை அதாவது மரபுவழி வந்த நோய்களை குறைக்கின்றது.
குறிப்பாக ஒன்பதாம் பாவம் 6 8 12-பாவங்களுடன் தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு பாரம்பரியம் மூலமான நோய்கள் மற்றும் உடல் உறுப்புகளின் அமைப்பு மாறுதல் உடல் உறுப்புகளின் இயக்க மறுத்தல் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Jothisha Acharya
Kaniprakash M
8056245107
No comments:
Post a Comment