Friday, 5 July 2019

அத்தி வரதரை வணங்கும் முறை:


அத்தி வரதரை ஒவ்வொரு ராசியினரும் எவ்வாறு தரிசிக்க வேண்டும
அத்தி வரத பெருமாளை தலையிலிருந்து கால் வரை பார்த்து வணங்குதல் மிகவும் நல்லது. கு

ஒவ்வொருவரும், அவர்களின் ராசிக்கேற்ப எப்படி வணங்க வேண்டும் என்பதையும் 
இங்கு தெரிந்து கொள்வோம். 

மேஷம்
பெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவது மிகப்பெரிய தீட்சிதை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. 

ரிஷபம் 
ரிஷப ராசியைச் சேர்ந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பெருமாளின் கன்னங்களை பார்த்து சேவிப்பது சிறந்தது. 
ஆண்கள் வலது கன்னம், பெண்கள் இடது கன்னம் பார்த்து பிரார்த்தனை வைப்பதோடு, முழு பெருமாளையும் பார்த்து வணங்குவது நல்லது. 

மிதுனம் 
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் பெருமாளுடைய இடது தோள் அல்லது வலது தோள் பார்த்து பிரார்த்திக்க வேண்டும். 
ஆண்கள் வலது தோள், பெண்கள் இடது தோள் பார்த்து பிரார்த்தனை வைத்து பெருமாளை முழுவதுமாக கண்டு தரிசிக்க வேண்டும். 

கடகம் 
பெருமாளின் கை மேல் நோக்கி காட்டும் கையின் உள்ளங்கையை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும் 
சிம்மம் 
பெருமாளின் தாடையை பார்த்து பிரார்த்திக்க வேண்டும். சமூதாயத்தில் பிரபலாமாக வாழ வேண்டும் என நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தாடையை பார்த்து பிரார்த்தனை வைக்க வேண்டும். 

கன்னி 
பொதுவாக வயதானாலும், இளமையாக தோன்றக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் வசீகரமான தோற்றம் உள்ள கன்னி ராசிக்காரர்கள், பெருமாளின் இடுப்பு பகுதியைப் பார்த்து பிரார்த்தனை வைப்பது நல்லது. 

திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்! 

துலாம் 
துலாம் ராசியினர் பெருமாளின் முழங்கால் பார்த்து பிரார்த்தனை செய்வது நல்லது. துலாம் ராசியினர் நேர்மையானவர்கள் என்பதால், கலியுகத்தில் அதிக சிக்கலை அனுபவிப்பவர். 
அதனால் அவர்கள் பெருமாளின் முழங்கால் பகுதியை பார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம். 

விருச்சிகம் 
பெருமாளின் பாதத்தைப் பார்த்து விருச்சிக ராசியினர் வணங்குவது நல்லது. பாதத்தைப்பார்த்து வழிபட்டால் எந்த வித சனி பகவானின் பிரச்னையிலிருந்து விடுபடலாம். 
சனி பகவானின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்கக் கூடியவர் இந்த அத்தி வரதர். 

தனுசு 
தனுசு ராசியினர் பெருமாளின் கை புஜம் பகுதியைப் பார்த்து வழிபாடு செய்வது நல்லது . 

மகரம் 
பெருமாளின் நெற்றி மற்றும் முழங்கால் பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும். 

கும்பம் 
மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் இரு ராசியினரும் பெருமாளின் முழு உருவத்தைப் பார்த்து வழிபாடு செய்வதுடன், வேண்டுதல் வைக்கும் போது பெருமாளின் உதட்டு பகுதியையும், பெருமாளின் பாதத்தைப் பார்த்து வைத்தால் வாதம், வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட முடியும். 

மீனம் 
மீன ராசியினர் பெருமாளின் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தால், அருமையான, பெருமையான வாழ்க்கை வாழ முடியும். 

அத்தி வரதரை இப்படி வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு எப்படி இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான ஏற்றமும், நிம்மதி, மகிழ்ச்சியும் கிடைக்கும்.

No comments:

Post a Comment

திருமண பொருத்தம்

     திருமணம் என்பது இருவர் சார்ந்தது. ஆகையால் 1,7 ம் பாவத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். 1 ம் பாவம் ஜாதகரையும் 7 ம் பாவம் எதிர் பாலினத...