Wednesday, 17 July 2019

Monday, 15 July 2019

கிடைக்குமா?

உடனே கிடைத்தால்
சூரியன்


கிடைத்தது கைவிட்டு போனால் சந்திரன்.

கிடைக்கவேண்டியதை தானாக எடுத்துக்கொண்டால்
செவ்வாய்.

கிடைத்ததை ஆராய்ந்து பார்த்தால் புதன்.

கிடைத்தது மிகவும்
பிடித்து இருந்தால்
சுக்கிரன்.

பெரிதாக எதுவும் கிடைத்து
கடைசி வரை இருந்தால்
 குரு.

கிடைக்கும் என்று காத்திருந்தால் சனி.

கிடைத்தும்
 மனதிருப்தி இல்லை என்றால் ராகு.

கிடைத்ததையும் பயன்படுத்த முடியவில்லை என்றால்
கேது.

Thursday, 11 July 2019

பாவம் தரும் நோய்கள்:


1 =6,8,12
சுயசிந்தனை, செயல்திறனில் பாதிப்பு மற்றும் தலைப்பகுதி,மூளை போன்றவற்றில் நோய்கள் ஏற்படும்.

2 =6,8,12
கண்,பல்,வாய்,தொண்டை பகுதிகளில் பிரச்சினை.உடல் எதையும் ஏற்றுக் கொள்ளாத நிலை.

3 =6,8,12
தோள்பட்டை,காது, உணர்வு புலன்கள்,ரத்த நாளங்கள்,நரம்பு மண்டலங்களில் நோய் வருதல்,உடல் மெலிதல் போன்றவை ஏற்படும்.

4 =6,8,12
நுரையீரல்,மார்பு பகுதி,உடலில் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கும் உறுப்புகளில் பிரச்சினை,உடல் பருமன் போன்றவை ஏற்படும்.

5 =6,8,12
இருதயம்,முதுகு தண்டுவடம்,இரத்த அணுக்கள், விந்தணுக்கள் போன்றவற்றில் பிரச்சினை ஏற்படும்.

6 =6,8,12
தவறான உணவு பழக்கங்கள்,அதனால் வயிறு மற்றும் ஜீரண மண்டலத்தில் பிரச்சினை ஏற்படும்.

7 =6,8,12
கிட்னி பாதிப்பு,தொற்று நோய்கள்,தட்ப வெப்ப இயற்கை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகள் வரும்.

8 =6,8,12
மர்ம ஸ்தானத்தில் நோய்,உடல் உறுப்புகள் சேதமடைவதால் ஏற்படும் நோய்கள்.

9 =6,8,12
பராம்பரிய நோய்கள்,தகாத உறவினால் ஏற்படும் நோய்கள்,கட்டி மற்றும் வீக்கங்கள்.

10 =6,8,12
தேவைக்கு அதிகமாக சக்தி உற்பத்தியால் வரும் நோய்கள் மற்றும் தொடை பகுதிகளில் பாதிப்பு.

11 =6,8,12
 கால் மூட்டுகளில் பிரச்சினை, வைட்டமின் குறைபாட்டினால் வரும் நோய்கள்.

12 =6,8,12
உடலில் கழிவு பொருட்கள் வெளியேறுவதில் பிரச்சினை, ஒவ்வாமை,உடல் உறுப்புகள் செயல் இழத்தல் போன்றவற்றால் நோய்கள் உண்டாகும்.


7ம் பாவம்

7---4 or 10
*ஜாதகர் சொந்த தொழிலில் தானும் முன்னேறி தன்னுடைய வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துக்கொள்வார்.

7--2, 8
7---6,12
* சொந்த தொழிலுக்கு சிறப்பான பலனை தராது.
* வாடிக்கையாளர்களிடம் கருத்து வேறுபாடு, நெருக்கமின்மை போன்றவை இருந்தாலும், சொந்த தொழிலில் பெரிய அளவுவிழ்ச்சியைத்தராது.

7----3,7,11
* வாடிக்கையாளர்கள் மூலம் ஜாதகருக்கு பணம் கிடைக்கும்.
* வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிக அளவில் இருக்கும்.
* குறைந்த அளவு லாபத்தை நிறைய வாடிக்கையாளர்கள் மூலம் ஜாதகர் பெறுவர்.
* நியாயமான விலையில் வியாபாரம் செய்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வர்.

7----1, 7
       3, 9
       5,11
* சொந்த தொழிலுக்கு மத்திம பலன்.
* ஜாதகரும் வாடிக்கையாளர்களும் ஓருவருக்கொருவர் பொருளாதாரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல்,பரஸ்பர நம்பிக்கை, நட்பு என்ற ரீதியில் உணர்வு பூர்வமாக தங்களது தொழில் உறவினை வைத்து கொள்வார்கள்.
* அகம் சார்ந்த தொழிலுக்கு (கலை,கலாச்சாரம்,ஆலோசனை,ஆன்மீகம் ,ஜோதிடம்,கமிஷன்,) போன்ற தொழிலுக்கு சிறப்பான பலனை தரும்.
* ஜாதகருக்கு கௌரவம், புகழ்,மகிழ்ச்சி கிடைக்கும்.
*பொருள்சார்ந்த தொழில் செய்பவருக்கு (உற்பத்தி, மருத்துவம், ஆடை, உணவு சார்ந்த தொழிலுக்கு) சிறப்பினை தராது.


7ம்பாவத்தின் காரகம்:
சொந்த தொழில்.

7----10 (or) 10க்கு சாதகமான பாவ தொடர்பு.
சொந்த தொழிலுக்கு விதி 
கொடுப்பினை உண்டு.

7----5,9
சொந்த தொழிலுக்கு விதி கொடுப்பினை இல்லை.

7----8,12
வாடிக்கையாளர்கள் மூலம் ஜாதகர் அதிக அளவு பிரச்சினை, விரையங்களை அனுபவிப்பார்.
* ஜாதகருக்கு இழப்பையும் வாடிக்கையாளர்களுக்கு அபரிமிதமான லாபமும் உண்டு.
* தொழிலில் பெரிய அளவு வீழ்ச்சியைதரும்.

7---2,6
* ஜாதகருக்கு அதிக லாபமும், வாடிக்கையாளர்களுக்கு இழப்பும் ஏற்படும்.
* வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில்தான் இருக்கும்.

7---4,10
* ஜாதகருக்கும் வாடிக்கையாளருக்கும் தொழில்ரீதியிலான தன நிலை சிறப்படையும்.

Friday, 5 July 2019

அத்தி வரதரை வணங்கும் முறை:


அத்தி வரதரை ஒவ்வொரு ராசியினரும் எவ்வாறு தரிசிக்க வேண்டும
அத்தி வரத பெருமாளை தலையிலிருந்து கால் வரை பார்த்து வணங்குதல் மிகவும் நல்லது. கு

ஒவ்வொருவரும், அவர்களின் ராசிக்கேற்ப எப்படி வணங்க வேண்டும் என்பதையும் 
இங்கு தெரிந்து கொள்வோம். 

மேஷம்
பெருமாளின் நெற்றியைப் பார்த்து வழிபடுவது மிகப்பெரிய தீட்சிதை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. 

ரிஷபம் 
ரிஷப ராசியைச் சேர்ந்த ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பெருமாளின் கன்னங்களை பார்த்து சேவிப்பது சிறந்தது. 
ஆண்கள் வலது கன்னம், பெண்கள் இடது கன்னம் பார்த்து பிரார்த்தனை வைப்பதோடு, முழு பெருமாளையும் பார்த்து வணங்குவது நல்லது. 

மிதுனம் 
மிதுன ராசியை சேர்ந்தவர்கள் பெருமாளுடைய இடது தோள் அல்லது வலது தோள் பார்த்து பிரார்த்திக்க வேண்டும். 
ஆண்கள் வலது தோள், பெண்கள் இடது தோள் பார்த்து பிரார்த்தனை வைத்து பெருமாளை முழுவதுமாக கண்டு தரிசிக்க வேண்டும். 

கடகம் 
பெருமாளின் கை மேல் நோக்கி காட்டும் கையின் உள்ளங்கையை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும் 
சிம்மம் 
பெருமாளின் தாடையை பார்த்து பிரார்த்திக்க வேண்டும். சமூதாயத்தில் பிரபலாமாக வாழ வேண்டும் என நினைக்கும் சிம்ம ராசிக்காரர்கள் தாடையை பார்த்து பிரார்த்தனை வைக்க வேண்டும். 

கன்னி 
பொதுவாக வயதானாலும், இளமையாக தோன்றக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் வசீகரமான தோற்றம் உள்ள கன்னி ராசிக்காரர்கள், பெருமாளின் இடுப்பு பகுதியைப் பார்த்து பிரார்த்தனை வைப்பது நல்லது. 

திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்! 

துலாம் 
துலாம் ராசியினர் பெருமாளின் முழங்கால் பார்த்து பிரார்த்தனை செய்வது நல்லது. துலாம் ராசியினர் நேர்மையானவர்கள் என்பதால், கலியுகத்தில் அதிக சிக்கலை அனுபவிப்பவர். 
அதனால் அவர்கள் பெருமாளின் முழங்கால் பகுதியை பார்த்து பிரார்த்தித்துக் கொள்ளலாம். 

விருச்சிகம் 
பெருமாளின் பாதத்தைப் பார்த்து விருச்சிக ராசியினர் வணங்குவது நல்லது. பாதத்தைப்பார்த்து வழிபட்டால் எந்த வித சனி பகவானின் பிரச்னையிலிருந்து விடுபடலாம். 
சனி பகவானின் ஆதிக்கத்தை தட்டிக் கேட்கக் கூடியவர் இந்த அத்தி வரதர். 

தனுசு 
தனுசு ராசியினர் பெருமாளின் கை புஜம் பகுதியைப் பார்த்து வழிபாடு செய்வது நல்லது . 

மகரம் 
பெருமாளின் நெற்றி மற்றும் முழங்கால் பகுதியைப் பார்த்து வணங்க வேண்டும். 

கும்பம் 
மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதி சனி என்பதால் இரு ராசியினரும் பெருமாளின் முழு உருவத்தைப் பார்த்து வழிபாடு செய்வதுடன், வேண்டுதல் வைக்கும் போது பெருமாளின் உதட்டு பகுதியையும், பெருமாளின் பாதத்தைப் பார்த்து வைத்தால் வாதம், வம்பு, வழக்குகளிலிருந்து விடுபட முடியும். 

மீனம் 
மீன ராசியினர் பெருமாளின் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்தால், அருமையான, பெருமையான வாழ்க்கை வாழ முடியும். 

அத்தி வரதரை இப்படி வணங்குவதன் மூலம் ஜாதகத்தில் நவகிரகங்கள் அமைப்பு எப்படி இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான ஏற்றமும், நிம்மதி, மகிழ்ச்சியும் கிடைக்கும்.

திருமண பொருத்தம்

     திருமணம் என்பது இருவர் சார்ந்தது. ஆகையால் 1,7 ம் பாவத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். 1 ம் பாவம் ஜாதகரையும் 7 ம் பாவம் எதிர் பாலினத...