Saturday, 8 June 2019

புதன்

சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் சூரியனுக்கு அருகில் உள்ளதால் மற்ற கிரகங்களை விட வேகமாக சூரியனை சுற்றி வந்து விடும் எனவே சுறுசுறுப்புக்கும் விரைந்து ஒரு செயலை முடிப்பதற்கும் புதனே காரகர் ஆவார்.   இளைஞர்கள் குழந்தை பருவத்தில் உள்ளவர்களுக்கு  புதன்காரகர் ஆவார்.

சமயோசித சிந்தனையுடன் செயல்பட்டு எந்த ஒரு செயலையும் புத்திக்கூர்மை உடையவர்கள் செய்துமுடிப்பார்கள் கிரகங்களில் சூரியனை மற்ற கிரகங்களைவிட புதன் விரைவில் சுற்றி வருவதால் புதனை புத்திகாரகன் என்று அழைக்கின்றோம்.

புத்தி உள்ளவர்கள் கல்வி கற்பதில் சிறந்து விளங்குவார்கள் எனவே கல்விகாரகன் புதன்.

புத்தி உள்ளவர்கள் எதிரிகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள் எப்பொழுதும் நடுநிலையுடன் இருந்து சமாளிப்பார்கள் எனவே சமாதானத்திற்கும்  காரகன் புதன். கல்விகாரகன்
புதன் என்றாலும் குறிப்பாக மிகவும் நுட்பமான புரிந்து கொள்ளக் கூடிய செயல்களை செய்யக் கூடியவர் என்பதால் புள்ளிகள் கணக்கில் புதன் காரர்கள் மேலும் காவியம் சிற்பம் போன்றவற்றுக்கு காரகர்.

ஏதேனும் ஒரு துறையில் முழுமை பெற்ற ஆசிரியர்கள் எதையாவது தேடி தேடிப் படிக்கும் மாணவர்கள் பல துறைகளையும் பயில்பவர்கள் எல்லா விஷயங்களின் கற்றுக்கொள்பவர்கள் புதனின் அம்சம் என்பதால் விகடகவி களுக்கும் சகலகலா கல்வி கற்றவர்களுக்கும் பல மொழி பேசுபவர்களுக்கும் ஒரு விஷயத்தை சரியாக திட்டமிடுபவர்களும் சாணக்கிய தன்மைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்பவர்களுக்கும் புதனே காரகர்.

விரைந்து முடிக்கும் செயல்களுக்கு புதன் காரகன் என்பதால் தகவல் தொடர்பு அஞ்சல் விளம்பரம் எடுத்து தொலைபேசி தந்தி தொலைக்காட்சி கம்ப்யூட்டர் பத்திரிக்கை போக்குவரத்து போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆகிறார்.

வியாபாரிகள் ஜோதிடர்கள் தூதுவர்கள் ஒரே சமயத்தில் பல செயல்களை செய்பவர்கள் தசாவதாரம் அதனை தரகு வேலை.

நரம்பு மண்டலம் உணர்வு பலன்கள் மாமன் உறவு முறை சமாதானம் திட்டமிடுதல் போன்றவற்றுக்கு காரகர். புதனுக்குரிய தெய்வம் கிருஷ்ண பகவான்.

பொது அறிவு தவணை முறை நுட்பமான பொருட்கள்.
 பல குரலில் பேசும் திறன் இளவரசன் நிபுணத்துவம் ஒருமுறைக்கு இருமுறை செய்யும் இரட்டைத்தன்மை பச்சைநிறம் விகடகவி நுட்பமான ஆராய்ச்சி
 சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவை
  வளைந்து கொடுக்கும் தன்மை பிரதிநிதிகள் உலோகங்களில் பித்தளை இலக்கணப் புலமை போன்றவற்றுக்கு புதனே காரகர் ஆகின்றார்.

No comments:

Post a Comment

திருமண பொருத்தம்

     திருமணம் என்பது இருவர் சார்ந்தது. ஆகையால் 1,7 ம் பாவத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டும். 1 ம் பாவம் ஜாதகரையும் 7 ம் பாவம் எதிர் பாலினத...